இளம்பிள்ளையில் சர்வதேச போதை ஒழிப்புத் தின உறுதிமொழி.

75பார்த்தது
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் சர்வதேச போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் பேரூராட்சித் தலைவர் நந்தினி ராஜகணேஷ் , துணைத்தலைவர் ராஜமாணிக்கம், செயல் அலுவலர் பிரகாஷ் மற்றும் அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும், சீரான குடிநீர் வினியோகம் வழங்குவது குறித்தும் , திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் தள்ளுவண்டி மூலம் மக்கும் குப்பை, மக்கா குப்பை தரம் பிரித்து வழங்குவது குறித்தும் , சமுதாய கழிப்பிடம் சுத்தம் செய்தல் குறித்தும், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்தல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரம் வழங்கி வந்தனர்.

தொடர்புடைய செய்தி