ஆத்தூரில் தீயணைப்பு தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது.
தீயணைப்பு பணியின் போது உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து சேலம் மாவட்டம், ஆத்தூர் தீயணைப்பு நிலையத்தில் தியாகிகள் தின அனுசரிக்கும் நிகழ்வு தீயனைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் உயிர்நீத்த வீரர்களின் நினைவாக வைக்கப்பட்ட கல் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.