ஆத்தூரில் முன்னாள் தேமுதிக நகர செயலாளர் திமுக மாவட்ட செயலாளர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் சீனிவாசன் இவர் தேமுதிகவில் முன்னாள் நகர செயலாளராக இருந்தார். இந்நிலையில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ். ஆர். சிவலிங்கம் முன்னிலையில் சீனிவாசன் தன்னை திமுகவில் இணைந்து கொண்டார். இந்நிகழ்வின் போது நகர திமுக செயலாளர் பாலசுப்ரமணியம், திமுக நிர்வாகிகள் என பலர் உடன் இருந்தனர்.