ரூ.4 கோடி கரண்ட் பில்.. ஷாக் ஆன ரயில்வே ஊழியர்

54பார்த்தது
ரூ.4 கோடி கரண்ட் பில்.. ஷாக் ஆன ரயில்வே ஊழியர்
உத்திரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் வசித்து வருபவர் ரயில்வே ஊழியர் வசந்த் சர்மா. இவருக்கு கடந்த 18ஆம் தேதி ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், 4 கோடி ரூபாய் மின் கட்டணம் என பில் வந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து மின் வாரிய செயல் பொறியாளர் சிவா திரிபாதியிடம் அவர் விசாரித்துள்ளார். அப்போது, “அது கணினி மூலம் அனுப்பப்படும் குறுந்தகவல் என்பதால், கணினியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கலாம்” என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி