கனடாவில் சாலை விபத்து: 3 இந்தியர்கள் பலி

57பார்த்தது
கனடாவில் சாலை விபத்து: 3 இந்தியர்கள் பலி
கனடாவில் வியாழக்கிழமை நள்ளிரவு கிரேட்டர் டொராண்டோவின் பிராம்ப்டன் நகரில் நடந்த சாலை விபத்தில் மூன்று இந்தியர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் ஹிருத்திக் சாப்ரா (23), அவரது தம்பி ரோஹன் (22) மற்றும் கௌரவ் பேஸ்கே (24) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். எதிரே வந்த இரண்டு வாகனங்கள் மோதியதில் இவ்விபத்து நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பிராம்ப்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 3 பேர் தங்கி இருந்தது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி