ஏப்ரல் 1 வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம்: தேர்தல் ஆணையம்

69பார்த்தது
ஏப்ரல் 1 வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம்: தேர்தல் ஆணையம்
ஏப்ரல் 1-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்றும், அதில் மாற்றங்கள், சேர்க்க வாய்ப்புகள் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தொண்டர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் தேர்தல் பணிகளில் பங்கேற்க வேண்டாம் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தேர்தல் காலங்களில் வன்முறையில் ஈடுபட்டால் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும், சிறார்களைத் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தக் கூடாது. மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையில் செயல்படக் கூடாது என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி