வாழைப்பழம், சிப்ஸ் கொடுத்து சிறுமி கற்பழிப்பு!

106976பார்த்தது
வாழைப்பழம், சிப்ஸ் கொடுத்து சிறுமி கற்பழிப்பு!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சோழதேவனஹள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது தொட்டபயலகெரே கிராமம். இங்கு உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மணிஷ் என்பவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவர் தங்கியிருந்த வீட்டின் அருகே தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். தம்பதிக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் மணிஸ் தனியாக இருந்த சிறுமியிடம் வாழைப்பழம் , சிப்ஸ் கொடுத்து பேசியுள்ளார். பின்பு அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வீட்டிற்கு வந்த பெற்றோரிடம் சிறுமி அழுதபடி நடந்ததைக் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தனர். பின்பு சோழதேவனஹள்ளி காவல் நிலையத்தில் புகாரளித்தனர் புகாரின் பேரில் போலீசார் மனிஸ் மீது போட்டோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி