காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி மகா சிவராத்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்தான தனது எக்ஸ் பக்கத்தில், காலத்தை தோற்கடி, துன்பத்தை தோற்கடி, துக்கத்தை தோற்கடி, வறுமையை தோற்கடி, ஒவ்வொருவரின் வாழ்விலும் நீதியை நிலைநாட்டுங்கள். எங்கும் சிவனே.. மகாசிவராத்திரியின் புனித திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். சிவலிங்கத்தை வழிபடும் புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.