காருக்குள் மலைப்பாம்பு: சர்வீஸ் சென்டரில் பரபரப்பு

83பார்த்தது
காருக்குள் மலைப்பாம்பு: சர்வீஸ் சென்டரில் பரபரப்பு
நெல்லை மாவட்டம் வள்ளியூர் நான்கு வழி சாலையில் உள்ள கார் ஷோருமிற்கு சர்விஸ்-க்கு வந்த டாடா டியாகோ காரில் மிகப்பெரிய மலைப் பாம்பு இருப்பதாக வள்ளியூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மலைப் பாம்பை லாவகமாக மீட்டு வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். கார் என்ஜின் பகுதியில் மலைப் பாம்பு புகுந்து இருந்த சம்பவம் அங்கிருந்த ஊழியர்களையும், வாகன உரிமையாளரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தொடர்புடைய செய்தி