ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய திருப்பணிக்கு அடிக்கல் நாட்ப்பட்டது

59பார்த்தது
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒதியம்பட்டு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சிவா கலந்து கொண்டு அடிக்கல் நாட்டும் விழாவிற்கான பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் சிவா ஆலய திருப்பணிக்காக ரூபாய் ஒரு லட்சம் நன்கொடையை ஆலய நிர்வாகிகளிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஆலய நிர்வாக அதிகாரி பர்குணன், ஊர் முக்கியஸ்தர்கள் மாரிமுத்து, திருவேங்கடம், பெருமாள், ஹரிகிருஷ்ணன், பாலு, விவசாய அணி குலசேகரன், இளஞ்செழிய பாண்டியன், மணிகண்டன், ரமணன், ஆனந்து, இரணியன், வேலவன், காத்தவராயன், சேகர் முதலியார் உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஆலய நிர்வாக அதிகாரி பற்குணன் மற்றும் ஊர் பொதுமக்கள் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி