வடிநீர் வாய்க்கால் பணி நிறைவடைந்ததால் மொட்டையடித்த எம். எல். ஏ

58பார்த்தது
வடிநீர் வாய்க்கால் பணி நிறைவடைந்ததால் மொட்டையடித்த எம். எல். ஏ
புதுச்சேரி மாநில காமராஜர் நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார். இவர் ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மழைநீர் வாய்க்கால் திட்ட பணிகள் அனைத்தும் நிறைவேறினால் அவர் வேளாங்கண்ணி மாதாவிற்கு மொட்டை போடுவதாக வேண்டியிருந்தார். அதன்படி பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து தனது வேண்டுதலை நிறைவேற்ற தொகுதி் மக்களுடன் வேளாங்கண்ணிக்கு சென்றார். பின்னர் அவர் வேண்டுதலுக்காக மொட்டை போட்டுக் கொண்டார். அவருடன் சென்ற அப்பகுதியை சேர்ந்த நிர்வாகிகளும் சென்றிருந்தனர்.

தொடர்புடைய செய்தி