உழவர்கரை தொகுதியில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு

64பார்த்தது
புதுச்சேரியில் நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் உழவர்கரை தொகுதியில் திமுக தொகுதி செயலாளர் கலிய கார்த்திகேயன் தலைமையில் திமுகவினர் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அவருடன் திமுக தொகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு கூட்டணி கட்சி வேட்பாளரான வைத்திலிங்கத்திற்கு கை சின்னத்தில் வாக்களிக்க கோரி வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி