ஸ்ரீ ஐயனாரப்பன் ஆலயத்தில் சித்திரை திருவிழா கொண்டாட்டம்

570பார்த்தது
புதுச்சேரி முதலியார் பேட்டை வேலராம்பட்டு திருமகள் நகரில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ பூரணி பொற்கலை சமேத ஸ்ரீ ஐயனாரப்பன் சுவாமிக்கு திருக்கல்யாணம் இரண்டாம் ஆண்டு சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதனையொட்டி இன்று (23.04.2024) காலை மங்கள இசை உடன் தொடங்கிய சித்திரை திருவிழா ஸ்ரீ பாலகணபதி ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீ சப்த கன்னிகள் வீரன் ஆகியோருக்கு சிறப்பு திருமஞ்சனமும் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

இதனை அடுத்து ஊரணி பொங்கல் வைத்தல் மகா தீபாரதனை மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது தொடர்ந்து மணமகள் அழைப்பு நடைபெற உள்ளது. இதனை அடுத்து இன்று மாலை 6 மணி அளவில் ஸ்ரீ பூரணி பொற்கலை சமேத ஐயனாரப்பன் சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இரவு 8 மணி அளவில் ஸ்ரீ ஐயனாரப்பன் சுவாமி திருமண திருக்காட்சி மாட வீதி வழியாக வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதில் வேல்ராம்பட்டு திருமகள் நகரைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளில் அருள்மிகு ஸ்ரீ பூரணி பொற்கலை சமேத நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி