நாளை பொது தேர்வு: செல்வப்பெருந்தகை வாழ்த்து

51பார்த்தது
நாளை பொது தேர்வு: செல்வப்பெருந்தகை வாழ்த்து
நாளை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், நாளை பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது. தேர்வுகள் என்பது மாணவர்கள் என்ன படித்தார்களோ அதை மதிப்பிடுவதுதானே தவிர, மாணவர்களை மதிப்பிடுவது அல்ல. நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொள்ளுங்கள். மாணவச் செல்வங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், கவனத்துடனும், சிறந்த முறையிலும் தேர்வு எழுதி வெற்றி பெற்று சாதனை புரிய வேண்டுமென தேர்வு எழுதச் செல்லும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி