நா.த.க சாட்டை துரைமுருகன் மீது பொதுமக்கள் தாக்குதல்..!

71பார்த்தது
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்கு பல கட்சி தலைவர்களும் அங்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவரும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன், இன்று (ஜூன் 21) கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக சென்றார். அப்போது அவரிடம் பொதுமக்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. பின்னர் வாக்குவாதம் முற்றி சாட்டை துரைமுருகன் மீது தாக்குதலும் நடந்துள்ளது. இது குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

நன்றி: Spark Media

தொடர்புடைய செய்தி