சனி, ஞாயிறு விடுமுறை மற்றும் முகூர்த்த நாளை முன்னிட்டு தனியார் பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வழக்கமாக வசூலிக்கும் கட்டணத்தை விட ரூ.3,500 வரை 2 மடங்கிற்கும் மேல் உயர்ந்துள்ளதாக பயணிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதேபோல் மதுரை, கோவையில் இருந்து சென்னைக்கு விமான கட்டணம் ரூ.15,000 வரை அதிகரித்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.