மாநில பொதுக்குழு கூட்டம்

58பார்த்தது
பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதி பணியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மே 5ம் தேதி நடைபெற்றது மாநிலத் தலைவர் காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,
மாநில பொருளாளர் பெரியசாமி, மாநில சங்க நிறுவனர் தங்கவேல், மற்றும் நிர்வாகிகள் பிச்சா மணி தனம், கோவிந்தராஜன், மூக்கையன் பழனிச்சாமி, தங்கமணி, மலையாளன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
கூட்டத்தில்
சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் குமார் கலந்து கொண்டு
சிறப்புரையாற்றினார்,

இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அரசுக்கு முன் வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
இந்நிகழ்ச்சியில்
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் அமுத கவி மாவட்ட துணைத் தலைவர் சிங்காரம்,
வட்டத் தலைவர் ஆறுமுகம்,
ஏ ஐ டி யு சி மாவட்ட தலைவர் ஞானசேகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் ஜெயராமன், உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி