பெரம்பலூர் நகரில் இலவசமாக இளநீர், தர்பூசணி வழங்கல்

532பார்த்தது
பெரம்பலூர் நகரில் இலவசமாக இளநீர், தர்பூசணி வழங்கல்
பெரம்பலூர் நகரில் திமுக சார்பில் பொது மக்கள் பயன்பெறும வகையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

பெரம்பலூர் நகரில், பொதுமக்கள் பயன்பெறும வகையில் தி. மு. க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.வெயில் தாக்கம் அதிகளவு இருந்து வருவதால் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கினங்க, தி.மு.க‌. சார்பில், கோடைகால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. இதில், பெரம்பலூர் மாவட்ட திமுக சார்பில் பெரம்பலூர் நகரில், திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் - பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, நீர், மோர், பானகம், தர்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில்,மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன், மாவட்ட அவைத்தலைவர் நடராஜன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், உள்ளிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி