உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற 8 லட்சத்து 50, ஆயிரம் பணம்

1559பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் செட்டிகுளம் சாலையில், உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற 8 லட்சத்து 50, ஆயிரம் பணத்தை தேர்தல் நிலையான கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் ஆலத்தூர் சாலை பகுதியில் உள்ள மாணவர் விடுதி அருகே , தேர்தல் பறக்கும் படையினர்
வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு காரில்
வந்த பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் சசிகுமார் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ 8, 50, 000 பணத்தை, பெரம்பலூர் வேளாண்மை பொறியியல் துறை, உதவி பொறியாளர் சத்யா, தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் கைப்பற்றி. பணத்தை பெரம்பலூர், சார் ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கோகுலிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி