ஸ்ரீ திரௌபதி அம்மன் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

52பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம், நெய்க்குப்பை கிராமத்தில் உள்ள, மிகவும் பழமையும் புராதான வரலாறும் கொண்ட ஸ்ரீ விநாயகர்
ஸ்ரீ திரௌபதி அம்மன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ எல்லையம்மன் ரேணுகாதேவி, ஸ்ரீ நல்அரவான் ஆகிய திருக்கோவில்கள் உள்ளன, இக் கோவில்கள் பல ஆண்டுக்கு பின் புனரமைக்கும் பணிகள் நடைபெற்றன. இப்பணிகள் முடிவடைந்து அதற்கான குப்பாபிஷேக நிகழ்ச்சி,
ஜூன் - 12ம் தேதி பந்த கால் ஊன்றி காப்பு கட்டுதலுடன் தொடங்கிய நிகழ்ச்சியை தொடர்ந்து
ஜூன் - 15ம் தேதி கணபதி ஹோமம், வாஸ்து சாந்தியுடன் மகாயாகம் தொடங்கி நடைபெற்றது இதனை தொடர்ந்து மூன்று கால பூஜைகள் முடிந்த பிறகு ஜூன் 16ஆம் தேதி திருமங்கல இசையுடன் திருமுறை பாராயணம் மகா பூர்ண ஹீதி முடிந்து யாகசாலையில் இருந்து கடங்கல் புறப்பட்டு கோபுர கலசம் கொண்டுவரப்பட்டது அங்கு கோபுரகலசத்திற்கு சிறப்பு பூஜைகள் தொடர்ந்து புனித தீர்த்தம் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது, இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர் இதனைத் தொடர்ந்து பக்தர்கள் மீது நவீன முறையில் ட்ரோன் மூலம் பூக்கள் தூவி, புனித நீர் தெளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி