சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏ

60பார்த்தது
சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏ
பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் பல்வேறு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.


பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஏப்ரல் 22ஆம் தேதி காலை 11 மணியளவில் பல்வேறு சிவ நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் அதன்படி பெரம்பலூர், பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வெங்கடேஸ்வரா திருமண மண்டபத்தில்நாவலூர் முன்னாள் கிளைக் கழக. திமுக பிரதிநிதி பழனிவேல் மல்லிகா வின் மருமகள் கஸ்தூரி சரவணன் வளைகாப்பு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு, வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார், அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் 18-வது வார்டு எடுத்தல் பகுதியில் உள்ள திமுக பிரதிநிதி செல்வியின் மகன் மணிகண்டன் கமலி - ஆகியூர் திருமணத்தை தொடர்ந்து அவர்களது இல்லம் சென்று மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார், இதனைத் தொடர்ந்து திருப்பெயர் திமுக கிளை கழக செயலாளர் செந்தில்குமார் குழந்தைகளின் காதணி விழா நடைபெற்றது தொடர்ந்து அவர்களது இல்லம் சென்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார், மேலும் மேலும் வ. கிரனூர் திமுக கிளை கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி குழந்தைகள் காதணி விழாவில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.


இந்நிகழ்ச்சியின் போது திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி