சம்பர்க் கிராந்தி ரயிலில் புகை‌ - பதறி ஓடிய பயணிகள்

58பார்த்தது
சம்பர்க் கிராந்தி ரயிலில் புகை‌ - பதறி ஓடிய பயணிகள்
பீகார் மாநிலம் சமஸ்திபூர் ரயில் நிலையத்தில் பீகார் சம்பர்க் கிராந்தி ரயிலில் தீ பற்றியது. தீ மளமளவென பரவியதால் பயணிகள் ரயிலில் இருந்து குதித்து அலறியடித்து ஓடினர். உடனே ரயில் நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. ரயில் நடைமேடையில் இருந்து நகர்ந்ததும், சம்பவத்தை கவனித்த லோகோ பைலட் உடனடியாக ரயிலை நிறுத்தினார். ஆர்பிஎப் மற்றும் ஜிஆர்பி வீரர்கள் விரைந்து வந்து ரயிலை சோதனை செய்ததில், தீயணைப்பான் சிலிண்டர் கசிந்து புகை வெளியேறியதால் தீ பற்றியது தெரியவந்தது.

தொடர்புடைய செய்தி