கடைசி பந்தை வீசுவதற்கு முன்பே கண்கலங்கிய பாண்ட்யா! (வீடியோ)

73பார்த்தது
கடைசி பந்தை வீசுவதற்கு முன்பே இந்திய அணியின் துணைக் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தென்னாப்பிரிக்க அணிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். அந்த ஓவரின் முதல் 5 பந்துகளை அவர் சிறப்பாக வீசியதால் கடைசி பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்டது. இதனால், இந்தியா வெற்றி பெற்றது உறுதியாகிவிட்டது. இதனால் கடைசி பந்தை போடுவதற்கு முன்பே ஹர்திக் பாண்ட்யா உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார். கடைசி பந்தை போட்ட பிறகும் அவர் அழுதார். அவரை சக வீரர்கள் கட்டியணைத்து ஆறுதல் கூறினர்.

தொடர்புடைய செய்தி