'எங்களது அலுவலகம் திறந்தே இருக்கும்' - CPIM ஸ்ரீராம்

62பார்த்தது
'எங்களது அலுவலகம் திறந்தே இருக்கும்' - CPIM ஸ்ரீராம்
திருநெல்வேலியில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை 13 பேர் கொண்ட கும்பல் சூறையாடியது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மார்க்சிஸ்ட் நெல்லை மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம், “சாதி மறுப்பு மற்றும் கலப்பு திருமணங்களுக்கு, காதலர்களுக்கு சாட்சி கையெழுத்திட திருநெல்வேலி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை எப்பொழுதும் அணுகலாம்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி