காதலனுக்காக கணவனை கொன்ற மனைவி!

10545பார்த்தது
காதலனுக்காக கணவனை கொன்ற மனைவி!
தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டத்தில் 2 நாட்களுக்கு முன்பு ஜாதவ் கஜானந்த் ஜைனத் (40) என்ற ஆசிரியர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் திடுக்கிடும் உண்மை வெளி வந்துள்ளது. போலீசார் சந்தேகத்தில் அடிப்படையில் ஜாதவின் மனைவி விஜயலட்சுமியின் மொபைல் போனை பரிசோதித்து பார்த்ததில் மகேஷ் என்பவரை விஜயலட்சுமி காதலித்து வந்த உண்மை தெரிய வந்தது.

இதன்பின், மகேஷ் மற்றும் விஜயலட்சுமியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் தங்களது காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை இருவரும் திட்டமிட்டு கூலிப்படையினரை வைத்து கொலை செய்த உண்மை வெளி வந்துள்ளது. இதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி