புத்தாண்டையொட்டி அதிகாலையில் கோயில் நடை திறப்பு

1097பார்த்தது
புத்தாண்டையொட்டி அதிகாலையில் கோயில் நடை திறப்பு
புத்தாண்டு தினத்தில் பலர் அதிகாலையில் கோயிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அனைத்து கோயில்களிலும் புத்தாண்டு தினத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பக்தர்களின் வசதிக்காக முக்கியமான கோயில்களில் நாளை காலை 4 மணிக்கு நடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து கோயில்களிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு தினத்தில் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டு மன நிம்மதி மற்றும் புதிய நம்பிக்கைகளை பெறுவதற்காக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.