கடலில் மூழ்கி ஒருவர் பலி!

69பார்த்தது
கடலில் மூழ்கி ஒருவர் பலி!
தூத்துக்குடி தெற்கு காட்டன் ரோடு அன்னை தெரசா காலனியைச் சேர்ந்தவர் பிச்சையா (61). தொழிலாளி. இவர் நேற்று காலையில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் பகுதியில் படகுகள் பழுது பார்க்கும் யார்டில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவர் கடலில் மூழ்கி படகில் உள்ள கயிற்றை அகற்ற முயன்றபோது எதிர்பாராதவிதமாக மூச்சுத் திணறி பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பிச்சையாவின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.