உயிருடன் கால்வாயில் வீசப்பட்ட முதியவர் (வீடியோ)

87709பார்த்தது
உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் சமீபத்தில் நடந்த மனிதாபிமானமற்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பார்ரா போலீஸ் ஸ்டேஷன் பகுதியில் வசித்துவந்த முதியவரை இரண்டு இளைஞர்கள் அட்டைப்பெட்டியில் வைத்து வாய்க்காலில் வீசியுள்ளனர். முதியவர் உயிருடன் இருக்கும் போதே இளைஞர்கள் இதைச் செய்துள்ளனர். முதியவரின் மகன் அளித்த புகாரின் பெயரில்வழக்கு பதிவு செய்த போலீசார் முதியவரின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி வீடியோவில் சாலையில் ஏராளமானோர் இருந்தும் இந்தக் கொடுமையை நிறுத்தவில்லை. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி