உத்தரகாண்ட் ருத்ராபூர் ஹல்த்வானி நெடுஞ்சாலையில் பயங்கர சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. அதிவேகமாக வந்த கார் மீது சாலையை வேகமாக கடக்க வந்த புலி மோதியது. இந்த சம்பவத்தில் புலி உயிரிழந்தது. இவ்விபத்தில் காரில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் பொது மக்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து புலியை கைப்பற்றினர்.