செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் அதிகாரிகள் ஆய்வு

56029பார்த்தது
செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் அதிகாரிகள் ஆய்வு
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜுன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் சென்னை புழல் சிறையில் உள்ளார்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் கரூரில் கட்டி வரும் புதிய வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அங்கு, கட்டடத்தை அளவீடு செய்யும் பணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கரூர் ராம் நகர் பகுதியில் அசோக்குமாரின் மனைவி பெயரில் உள்ள இடத்தில் அசோக்குமார் பல கோடி மதிப்பில் பங்களா கட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி