ஒடிசாவில் 24 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்த நவீன் பட்நாயக், தனது இல்லத்தையே அலுவலகமாக நடத்தி வந்த நிலையில், தற்போது புதிய அரசு வந்துள்ளதால் முதலமைச்சருக்கு வீடு மற்றும் முகாம் அலுவலகத்தை அம்மாநில அரசு தேடி வருகிறது. தற்போது முதலமைச்சரின் குறைதீர்ப்பு மையம் இயங்கி வரும் கட்டடத்தை பழுதுபார்த்து முதலமைச்சரின் இல்லமாக மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இன்று நடைபெறும் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், புதிய முதல்வர் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகிறது.