வந்தே பாரத் ரயிலில் முன்பதிவில்லாமல் ஏறிய மக்கள் (வீடியோ)

67பார்த்தது
முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில், முன்பதிவு செய்யாத பயணிகள் ஏறி தொல்லை கொடுப்பது வாடிக்கை. ஆனால் இப்போது வந்தே பாரத் ரயிலிலும் முன்பதிவு செய்யாதவர்கள் ஏறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவில் இருந்து டேராடூன் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஆனால் அவர்கள் அனைவரும் டிக்கெட் எடுக்கவில்லை. நூற்றுக்கணக்கான பயணிகள் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்தனர். பயணி ஒருவர் இதை வீடியோவாக எடுத்து ரயில்வேயில் புகாரளித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

தொடர்புடைய செய்தி