அதிமுகவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை

1027பார்த்தது
அதிமுகவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கப்படாதது வருத்தம். தொகுதி கிடைக்காததால் தமிழ்நாடு முழுவதும் புரட்சி பாரதம் கட்சி தொண்டர்கள் மன வருத்ததோடு உள்ளனர். தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்து நின்று சாதிக்க முடியாது. தற்போது நம்பிக்கையை இழந்து இருக்கிறோம். தேவைப்பட்டால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய தயங்க மாட்டேன் என ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும் பாஜக உடன் கூட்டணி வைப்பது தமிழ்நாட்டிற்கு முரனானது. அதிமுக கட்சி எங்களுக்கு செய்தது துரோகம் அதனால் அதிமுகவுடன் இனி பேச்சு வார்த்தை இல்லை என திருவள்ளூர் ஆண்டர்சன் பேட்டையில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ பேட்டியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி