வனப்பகுதியில் பற்றி எரிந்த காட்டுத் தீ

1094பார்த்தது
வனப்பகுதியில் பற்றி எரிந்த காட்டுத் தீ
பந்தலூர் அருகே மழவன்சேரம்பாடி, கோட்டப்பாடி பகுதிகளில் வனப்பகுதி உள்ளது. தற்போது நிலவும் காலநிலை மாற்றத்தால் வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் செடி கொடிகளும் காய்ந்த நிலையில் உள்ளன. திடீரென சேரம்பாடி வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதுபற்றி அறிந்ததும் பிதிர்காடு வனச்சரகர் ரவி, வனவர் பெலிக்ஸ், வனகாப்பாளர் கோபு மற்றும் வனத்துறையினர் அங்கு சென்று தீயை அணைக்கும் பணி யில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி