இந்தியா கூட்டணிக்குள் சரமாரி வார்த்தை போர்.. யெச்சூரி காட்டம்!

58பார்த்தது
இந்தியா கூட்டணிக்குள் சரமாரி வார்த்தை போர்.. யெச்சூரி காட்டம்!
மோடியை வீழ்த்துவதற்கு பதில் நீங்கள் பினராயி விஜயனை நாற்காலியில் இருந்து இறக்க முயற்சிக்கிறீர்களா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கேள்வியெழுப்பியுள்ளார். தேசிய அளவில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளும் அங்கம் வகிக்கின்றன. ஆனால் கேரளாவில் இது முற்றிலும் மாறுபடும். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேரளாவின் வயநாட்டின் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், ராகுல்காந்தியை கடுமையாக விமர்சித்துள்ள சீதாராம் யெச்சூரி, நீங்கள் மோடியை தோற்கடிக்க உழைப்பது போல் தெரியவில்லை. பினராயி விஜயனை நாற்காலியில் இருந்து கீழே இறக்க முயற்சிப்பது போல்தான் நடந்து கொள்கிறீர்கள். பாஜகவை தீரத்துடன் எதிர்ப்பது மார்க்சிஸ்ட் கட்சிதான். ஆனால் கேரளாவில் காங்கிரஸ் இடதுசாரி கூட்டணியை எதிரி போல் பார்க்கிறது என விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி