திருச்செங்கோடு: வேட்பாளர் பெயரை மாற்றி கூறிய நடிகை கெளதமி

4011பார்த்தது
திருச்செங்கோடு வாலரை கேட் பகுதியில் நேற்று இரவு நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் தமிழ் மணிக்கு ஆதரவாக நடிகை கௌதமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் தவறுதலாக தமிழ்மணி என்பதற்கு பதிலாக, ஈரோடு வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் என கூறினார். அப்போது அருகிலிருந்த முன்னாள் அமைச்சர் தங்கமணி வேட்பாளரின் பெயரை கூறவே, சுதாரித்துக் கொண்ட கௌதமி கூடியிருந்த மக்களிடம் மன்னிப்பு கேட்டார். மேலும் தொகுதி மாறி பிரச்சாரம் செய்வதால் வேட்பாளர் பெயர் தவறாக வந்துவிட்டது என்றார். இதனை அடுத்து தமிழ் மணிக்கு உங்களது வாக்குகளை வாக்களிக்க வேண்டும் என கூறினார்.

தொடர்புடைய செய்தி