ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

83பார்த்தது
திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி சார்பில் ஏழை எளியவருக்கு அன்னதான நிகழ்ச்சி தமிழக வெற்றி கழகம் சார்பில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழகமெங்கும் அன்னதானம் நிகழ்ச்சிகளை வழங்க கட்சியின் தலைவர் விஜய் அவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன்படி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களின் அறிவுரைப்படி, நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் ஜேஜே செந்தில்நாதன் அவர்களின் ஏற்பாட்டில் நாமக்கல் கிழக்கு மாவட்டம் முழுவதும் ஏழை எளியவருக்கு அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதன் ஒரு பகுதியாக திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் சார்பில்  புதிய பேருந்து நிலையம் பகுதியில் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி