என்னை கொலை பண்ணிடுவாங்க... ஊராட்சிமன்ற தலைவர் பரபரப்பு வீடியோ

4935பார்த்தது
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அரியூர் நாடு ஊராட்சி மன்ற தலைவர் நாகலிங்கம். இவர் தேர்தல் நாளான நேற்று வாக்குச்சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் 10க்கும் மேற்பட்ட நபர்களுடன் வந்து, தன்னை கொலை செய்ய முயற்சி செய்ததாக நாகலிங்கம் வாழவந்தி நாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவர் புகார் அளித்துள்ளார். ஏற்கனவே அவர்கள் கொலை செய்துள்ளதால் தன்னையும் கொலை செய்து விடுவார்கள் என்பதால் உரிய பாதுகாப்பு அளிக்கும்படி அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி