விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்

52பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சீர்காழி இன்ஸ்பெக்டர் புயல் பாலச்சந்திரன் பங்கேற்று அறிவுரைகளை கூறினார்.
இதில் ஊர்வலத்தில் களிமண்ணால் செய்யப்பட்ட நச்சுத்தன்மையற்ற இயற்கை காயங்கள் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை பயன்படுத்த வேண்டும்; ஊர்வல பாதைகளில் பட்டாசுகள் வெடிக்கக் கூடாது; 18 வயதிற்கு கீழ் உள்ள சிறார்களை ஊர்வலத்தில் அழைத்து செல்லக்கூடாது என தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி