மயிலாடுதுறை அருகே பல்லவராயன் பேட்டை பகுதியில் உள்ள நரிக்குறவர் காலனியில் புதியதாக போடப்பட்ட சாலையில் மழைநீர் தேங்கி இருப்பதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். மேலும் பள்ளி குழந்தைகள் மற்றும் முதியவர்கள் சிரமப்பட்டு தண்ணீரை கடந்து செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.