போதைப்பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு சீல்

77பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் காவல் சரக்கத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று வருவாய்த்துறை மற்றும் உணவு பாதுகாப்புத்துறையினர் பல்வேறு கடைகளில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூலி போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.

இதுல எடுத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இரண்டு கடைகளுக்கு சீல் வைத்து ரூபாய் 50, 000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இருவர் மீது வழக்கு பதிவு செய்து செம்பனார்கோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி