மயிலாடு துறை - Mayiladuthurai

பள்ளிக்கல்வி இயக்குனர் ஆய்வு

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுவந்த முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை, தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று தொடக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 99 ஊராட்சிகளில் உள்ள 115 அரசு உதவி பெறும் பள்ளிகளில் இத்திட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. இத்திட்டத்தின் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 6, 691 மாணவர்கள் பயன்பெறுவார்கள். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ குரு ஞானசம்பந்தர் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் இத்திட்டத்தை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ச. கண்ணப்பன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் மாணவர்களுக்கு காலை உணவு பரிமாறி அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். பின்னர் அவர் கூறுகையில் நேற்று ஊரகப் பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை, நகர் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படுவது குறித்து அரசு பரிசீலிக்கும் என்றார்.

வீடியோஸ்


நாகப்பட்டினம்
Jul 16, 2024, 16:07 IST/நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்

மறைமலை அடிகளார்திருஉருவ சிலை திறப்பு விழா

Jul 16, 2024, 16:07 IST
பிறமொழி சொற்களை தவிர்த்து தமிழ் மொழியை மட்டும் பயன்படுத்தி தனி தமிழ் தந்தை என அழைக்கப்படுபவர் மறைமலை அடிகளார் நாகப்பட்டினத்தில் 1986 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்த வேதாச்சலம் பிள்ளை என்ற பெயர் கொண்ட இவர் தமிழ் மீது கொண்ட பற்றினால் தனது பெயரை மறைமலை அடிகளார் என மாற்றிக் கொண்டார் மறைமலை அடிகளாருக்கு நாகை பழைய பேருந்து நிலையம் ரயில் நிலையம் எதிரில் திருவுருவ சிலை நிறுவப்பட்டிருந்தது இந்த சிலை தற்சமயம் நடைபெறும் ரயில்வே மேம்பால பணிக்காக அங்கிருந்து நாகை வெளிப்பாளையத்தில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான தம்பித்துரை பூங்காவில் மீண்டும் அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது இந்த சிலை மறைமலை அடிகளாரின் 148 வது பிறந்த நாளான இன்று திறந்து வைக்கப்பட்டது மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன் ஆகியோர் திறந்து வைத்து அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் அக்கட்சியின் நாகை மண்டல செயலாளர் அகஸ்டின் அற்புதராஜ் தலைமையில் மறைமலை அடிகளாரின் மகன் பச்சையப்பன் குடும்பத்தினருடன் சேர்ந்து திரளான நாம் தமிழர் கட்சியினர் மறைமலை அடிகளார் சிலைக்கு மாலை அறிவித்து மரியாதை செலுத்தினர்