மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட காந்தி பூங்காவில் தினம்தோறும் ஏராளமான நபர்கள் வந்து இளைப்பாறி செல்கின்றனர். இந்த நிலையில் இந்த குளமானது பாசிப் படிந்து, செடிகள் முளைத்து அதன் அருகில் குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதாரமற்ற முறையில் காணப்படுகிறது. இதனால் சீர்காழி நகராட்சி நடவடிக்கை எடுத்து அந்த குளத்தை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என்று நகராட்சி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.