மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் தனது தொகுதியில் உள்ள மக்கள் இலவச பட்டா விண்ணப்பத்திருந்தால் தகவல் தெரிவிக்கும்படி தெரிவித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை கச்சேரி சாலையில் அமைந்துள்ள கலைஞர் நகர் பகுதியில் சேர்ந்த மக்கள் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டி மனுக்களை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமாரிடம் அளித்தனர். அப்போது நகர் மன்ற உறுப்பினர் தெய்வநாயகம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.