மயிலாடுதுறை மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தல் குறித்து பொய்யான தகவலை சமூக வலைதளங்களில் பரப்பிய வானகிரி கிராமத்தைச் சேர்ந்த நேரு என்பவரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக இரண்டு நபர்களை போலீசார் தேடி வரும் நிலையில் பொய்யான செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.