எம் எல் ஏ சென்ற கார் விபத்து

62பார்த்தது
ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் இவர் காரைக்கால் மாவட்டம் சென்று விட்டு மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா வழியாக இனோவா கிரிஸ்டா காரில் சென்றுள்ளார். அப்போது என். என் சாவடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருக்கும்போது எருக்கடாஞ்சேரியை சேர்ந்த கொத்தனார் மணிகண்டன்(18), 12ஆம் வகுப்பு மாணவன் செல்வகுமார்(16) ஆகிய இருவர் இருசக்கர வாகனத்தில் (ஹோண்டா ஆக்டிவா) காளியப்பநல்லூர் ஊராட்சிமன்ற அலுவலகம் உள்ள சாலையில் இருந்து வந்து தேசிய நெடுஞ்சாலையில் ஏறி திரும்பியதாக கூறப்படுகிறது. அப்போது அதிவேகமாக வந்த ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனின் கார் திடீரென வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக காரை திருப்பியும் இருசக்கர வாகனத்தின்மீது மோதி கார்த்தி என்பவர் வீட்டின் போர்டிகோவில் புகுந்தது. வீட்டின் போர்டிகோ பகுதில் நிறுத்தியிருந்த கார், இருசக்கர வாகனம் சேதமடைந்தது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த மணிகண்டன் கால் மற்றும் உடலில் காயமும் செல்வகுமாருக்கு வலது முழங்காலுக்கு கீழ் எலும்பு முறிவு ஏற்பட்டது. அப்போது அவ்வழியாக வந்த மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தான்வந்த அரசு வாகனத்தில் இருவரையும் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி