பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

77பார்த்தது
பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் அமெரிக்க-இஸ்ரேல் போா் நடவடிக்கையை கண்டித்து மயிலாடுதுறையில் இடதுசாரி கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிபிஐ, சிபிஎம் மற்றும் சிபிஐ-எம். எல் ஆகிய இடதுசாரி கட்சிகள் சாா்பில் மயிலாடுதுறையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சிபிஎம் மாவட்ட செயலாளா் சீனிவாசன், சிபிஐ மாவட்ட செயலாளா் ஏ. சீனிவாசன், சிபிஐ-எம்எல் மாவட்ட செயலாளா் குணசேகரன் ஆகியோா் தலைமை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில், பாலஸ்தீனத்தை தாக்கி அழித்து வரும் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையைக் கண்டித்தும், போரில் ஈடுபடாத அப்பாவி பொதுமக்களையும், குழந்தைகளையும் படுகொலை செய்வதை நிறுத்த வலியுறுத்தியும், உலகில் போா் பதற்றத்தை உருவாக்கி வரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போா் வெறியை கண்டித்தும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாத்திட ஐ. நா. சபை தலையிட்டு மருத்துவ சிகிச்சை, உணவு மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றை உறுதிப்படுத்த வலியுறுத்தியும், சுயேச்சையான பாலஸ்தீனம் அமைவதற்கான ஐ. நாவின் தீா்மானத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தியும், பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்க ஆயுதங்களை அனுப்பி வைக்கும் மத்திய அரசை கண்டித்தும் கட்சி நிா்வாகிகள் பலா் பேசினா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி