மைவி3 ஆட்ஸ் நிறுவன உரிமையாளர் கைது

76பார்த்தது
மைவி3 ஆட்ஸ் நிறுவன உரிமையாளர் கைது
கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு 150-க்கும் மேற்பட்டோருடன் மை வி3 ஆட்ஸ் உரிமையாளர் சக்தி ஆனந்த் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தங்கள் நிறுவனம் குறித்து அவதூறு கருத்து பரப்புவோர் மீது நடவடிக்கை கோரி புகார் அளிக்க வந்த நிலையில், ஆணையரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அப்போது காவல் ஆணையர் மீட்டிங்கில் இருப்பதால் புகாரை எழுதி வாங்கி கொண்டு சக காவலர்கள் அவர்களை அடுத்த வாரம் வருமாறு வலியுறுத்தினர். இதனால் அவர்கள் தர்ணாவில் ஈடுபட்டதை தொடர்ந்து, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால், கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி