கடலில் மாயமான மாணவர்கள்.. தேடும் பணி தீவிரம்

51பார்த்தது
கடலில் மாயமான மாணவர்கள்.. தேடும் பணி தீவிரம்
ஆந்திர மாநிலம், அனந்தபூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 18 பேர் மற்றும் சித்தூர் மாவட்டம், நலகாம்பள்ளியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 22 பேர் என மொத்தம் 40 பேர் இரு குழுக்களாக இன்று மாமல்லபுரம் சுற்றுலா வந்தனர். அப்போது மாணவர்கள் கடலில் குளித்தனர். இதில் 10 மாணவர்களை ராட்சத அலை நடுக்கடலுக்கு இழுத்து சென்றது. இதில் 5 மாணவர்கள் மீட்கப்பட்ட நிலையில், அலையில் இழுத்து செல்லப்பட்ட விஜய்(வயது24) என்ற மாணவர் மூச்சு திணறி உயிரிழந்தார். மேலும் பெத்துராஜ்(26), ஷேசாரெட்டி(25), மவுனீஷ்(வயது18), பார்த்துஷா(வயது19) ஆகிய 4 பேர் கடலில் மாயமாகினர் அவர்களை தேடும் பனி நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி