முல்லைப்பெரியாறு அணை நிபுணர் குழு கூட்டம் ரத்து

84பார்த்தது
முல்லைப்பெரியாறு அணை நிபுணர் குழு கூட்டம் ரத்து
முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக இன்று (மே 28) நடைபெற இருந்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பாக மத்திய அரசு கொடுத்துள்ள ஒப்புதல் குறித்து உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும் என கேரள அரசு தரப்பில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து திடீரென கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி